வணக்கம் நண்பர்களே!
மதுரையிலிருந்து சென்று பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் K.S. கார்த்திக் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று ஒரு வியத்தற்குரிய கின்னஸ் உலக ரெக்கார்டை முறியடித்திருக்கிறார். இவர் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் B.Tech-ITமுடித்தவர்.
ரெக்கார்டு என்னன்னா... Attaching most wooden clips on face - அதிகமான மரக் கிளிப்புகளை முகத்தில் மாட்டிக் கொள்வது.
இந்த ரெக்கார்டை முன்பு வைத்திருந்தவர் லண்டனின் கேரி டர்னெர் (Gary Turner). இப்ப ஒரு இந்தியர் தன்னோட முகத்தில 160 கிளிப்புகளை மாட்டிக்கொண்டு உலக சாதனை படைத்திருக்கிறார். இந்த சாதனையை பெங்களூர் press club-ல் gazetted officer Dr.S.ராமராஜா அவர்கள் மற்றும் பல்வேறு பத்திரிக்கைகள் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினார். Link to this news in Times of India.
அவர் தூக்கத்துல என் மேல காலைப் போடுற அளவுக்கு எனக்கு நெருங்கிய நண்பர்னு சொல்லிக்கிறதுல எனக்குக் கூடுதல் பெருமை :)
அவரோட முகம் கிளிப் இல்லாம...
ஆரம்பம்...
முகம் முழுவதும் கிளிப்புகள்...
கிளிப்புகளை அகற்றிய பிறகு...
Hats off Karthick!
Monday, August 17, 2009
Friday, August 7, 2009
புகைப்பதை நிறுத்தினால் திருமணச் செலவை ஏற்போம் என்கிறது அரசு
புகைப்பிடிப்பதை நிறுத்தினால் திருமணச் செலவை ஏற்கத் தயார் என்று சவுதி அரேபிய அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நம்ம இந்திய அரசு இல்ல :)
அங்கு என்ன பெண்களா புகைப்பிடிக்கிறார்கள் என்று கேட்காதீர்கள். அங்கு வரதட்சணைக் கொடுப்பது ஆண்கள். அதனால்தான் இப்படி ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது சவுதி அரேபிய அரசு.
சவுதி அரேபியாவில் புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கவலை அடைந்துள்ளது எனவோ அரசுதான். சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் அதாவது கால்வாசிப் பேர் புகை பிடிப்பவர்களாக உள்ளனர்.
புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடச் செய்வதற்காக சவுதி அரேபிய அரசு ஒரு சங்கத்தையும் துவக்கியுள்ளது. அந்த சங்கத்தின் மூலம் புகை பிடிப்பதை கை விடுபவர்களுக்கு திருமணச் செலவு முழுவதையும் அரசு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புகை நிறுத்துபவர்கள் அனைவருக்கும் அரசு திருமணம் செய்து வைக்கும் என்று கனவுக் கோட்டை கட்டாதீர்கள். அதாவது, புகைப் பிடிப்பதை நிறுத்துவதாக முடிவெடுக்கும் ஆண்கள், இந்த சங்கத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு, அவரது திருமணச் செலவு முழுவதையும் அரசு அளிக்கும். அதில்லாமல், ஆறுதல் பரிசாக 20 பேருக்கு வீட்டுக்கு தேவையான மரச்சாமான்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நம்மூரில் பெண்கள் வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சவுதி அரேபியாவில் திருமணத்துக்கான செலவு முழுவதும் மணமகனின் பொறுப்புதான். திருமண நிகழ்ச்சி, வரதட்சணை, வீடு என்று எல்லாமே மணமகன்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனாலேயே பல ஆண்களுக்கு அங்கு வயதானபிறகு திருமணம் நடக்கிறது.
சரி அரசு செலவில் திருமணம் செய்து கொண்ட பிறகு புகைப்பிடித்தால் என்ன செய்வார்கள். விவாகரத்து வாங்கிக் கொடுத்து விடுவார்களோ?
அங்கு என்ன பெண்களா புகைப்பிடிக்கிறார்கள் என்று கேட்காதீர்கள். அங்கு வரதட்சணைக் கொடுப்பது ஆண்கள். அதனால்தான் இப்படி ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது சவுதி அரேபிய அரசு.
புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடச் செய்வதற்காக சவுதி அரேபிய அரசு ஒரு சங்கத்தையும் துவக்கியுள்ளது. அந்த சங்கத்தின் மூலம் புகை பிடிப்பதை கை விடுபவர்களுக்கு திருமணச் செலவு முழுவதையும் அரசு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புகை நிறுத்துபவர்கள் அனைவருக்கும் அரசு திருமணம் செய்து வைக்கும் என்று கனவுக் கோட்டை கட்டாதீர்கள். அதாவது, புகைப் பிடிப்பதை நிறுத்துவதாக முடிவெடுக்கும் ஆண்கள், இந்த சங்கத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு, அவரது திருமணச் செலவு முழுவதையும் அரசு அளிக்கும். அதில்லாமல், ஆறுதல் பரிசாக 20 பேருக்கு வீட்டுக்கு தேவையான மரச்சாமான்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நம்மூரில் பெண்கள் வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சவுதி அரேபியாவில் திருமணத்துக்கான செலவு முழுவதும் மணமகனின் பொறுப்புதான். திருமண நிகழ்ச்சி, வரதட்சணை, வீடு என்று எல்லாமே மணமகன்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனாலேயே பல ஆண்களுக்கு அங்கு வயதானபிறகு திருமணம் நடக்கிறது.
சரி அரசு செலவில் திருமணம் செய்து கொண்ட பிறகு புகைப்பிடித்தால் என்ன செய்வார்கள். விவாகரத்து வாங்கிக் கொடுத்து விடுவார்களோ?
Subscribe to:
Posts (Atom)